சனி, 31 டிசம்பர், 2011

நாஸ்கா லைன்ஸ் (Nazca Lines)

    நாஸ்கா லைன்ஸ் என்பது பெரு நாட்டின் நாஸ்க்கா எனும் வரண்ட பகுதியில் நிலத்தின்  மீது வரையபட்ட மிக நீண்ட (பல கி.மீ) கோடுகள் , சித்திரங்கள் ஆகும் . 
    
        அதாவது சாதாரணாமாக நிலத்தின் மீது நின்று பார்த்தால் ,இவைகள் நீண்ட ஒத்தையடி பாதைகள் போலவும், வாய்க்கால்கள் போலவும் தொ¢யும். ஆணால்  சற்று உயரே சென்று
பார்த்தால்(விமானத்தின் மீது பறந்து) , இந்த கோடுகள் விமானங்கள் தறையிரங்கும் ஓடுதளம் போலவும் , குரங்கு, நாய் ,மனிதன், பறவை போன்ற உருவங்கள் போல கானப்படும்.




       1920-ல் இந்த வழியாக விமானத்தில் பறந்து சென்ற சுற்றுலா பயணிகளால் எதெச்சியாக கவனிக்கப்பட்டு கண்டறியப்பட்ட விசயமாகும். அதுவரை இவைகள் சிறிய சாலைகள் போலவும், வாய்க்கால்கள் போலவும் பார்க்கப்பட்டு வந்தது.

     இவை கி.மு.600 முதல் கி.பி.200 க்குள் வரையப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையானது என வல்லுனர்கள் கூறுகிறனர். இதில் அதிசயம் என்னவென்றால் அன்றைய தொழில் நுட்பத்தில் இப்படிபட்ட சீரான நீண்ட, முறையான கோடுகளும் சித்திரங்களும் எவ்வாறு வரைய முடிந்தது என்பதுதான். அதனால் இந்த கோடுகளை பற்றி நிறைய கருத்துக்கள் நிலவுகின்றது.

    இங்குள்ள நிலத்தில் கருப்பு நிற கற்கள் பரந்திருக்கும். அவைகளை எடுத்துவிடால் வெள்ளை நிற மண் காணப்படும். இவ்வாறு இந்த கோடுகள் வரையப்பட்டது.  பட்டைகளின் முடிவில் சிதையாமல் இருக்க மர துண்டுகளை வைத்துள்ளனர். அந்த மரத்துண்டுகள் மூலம் 2000 ஆண்டுகள் பழமையானது என கண்டறியப்பட்டுள்ளது. சில கோடுகள் 6இன்ச் ஆழம் கொண்டது. 






       இந்த பகுதி மிக வரண்ட பகுதியாகும். இங்கு 25டிகிரி வெப்ப நிலை நிலவுகிறது. அதனால்தான் இந்த பட்டைகள் இன்றும் சிதையாமல் உள்ளது. 1998-ல் வந்த ஒரு வெள்ளத்தில் இந்த பகுதியின் தார் சாலைகள் பாதிக்கப்பட்டதாம் இருந்தும் ஆச்சர்யமாக  இந்த கோடுகள் சிதையவில்லை.

     இதில் விமான ஓடுதளம் போன்ற ஒரு பட்டை 2கி.மீ நீளம் கொண்டது. இந்த பட்டை மிக சீராக நேரே செல்கிறது. இவ்வளவு தூரத்திற்கு இதை எப்படிதான் நிலத்தில் வரைந்தார்கள் என்று அதிசயக்க வைக்கிறது. 

     இதை விட ஆச்சர்யதக்க வகையில் மலைகளின் மீது பல கைகளை கொண்ட ஒரு  உருவம் செதுக்கப்பட்டுள்ளது.இந்த மிக பொ¢ய கோடுகளும் சித்திரங்களும் எதற்காக வரையப்பட்டது என்பது பற்றி பல கருத்துக்கள் நிலவுகிறது.

     இந்த கோடுகள் விவசாயத்திகாக நீர் பாய்ச்ச செய்யபட்ட சிறிய வாய்க்கால்கள் என பல அறிவியலார்களால் ஏற்றுகொள்ளப்பட்ட காரணமாகும். அங்குள்ள மக்கள், இந்த சித்திரங்கள் நீர் தேவதையை திருப்திபடுத்த வரையப்பட்டவை என நம்புகிறனர்.

       வேற்று கிரக வாசிகளால் வரையப்பட்டு பயன்படுத்தபட்ட விமான ஓடுதளம் என்ற கருத்தும், இறைவன் பூமியை மேலிருந்து பார்த்து ரசிக்க வரையப்பட்டது என்ற கருத்தும் நிலவுகிறது.





    அறிவியளாலர் ஜானி இஸ்லா கருத்துப்படி  இந்த கோடுகள் கி.மு.500-ல் பரகாஸ்(Paracas) சமூகத்தினரால் உருவாக்கப்பட்டு கி.மு.50-ல் நாஸ்க்கா சமூகத்தினரால் மேம்படுத்தப்பட்டது என அறியப்படுகிறது.

     டொர்பியோ மெஜ்ஜியா என்பவர்தான் இந்த  கோடுகளைப் பற்றி 1927-ல் முதலில் ஆராய்ந்தார். அவர் இந்த கோடுகளை இன்கா சமூகத்தினரால் பயன்படுத்தப்பட்ட விமான ஓடுதளம் என்றார்.

     அறிவியளாலர்  மைக்கல் கேயே கூற்றுப்படி அன்றைய சமூகத்தினரால் இவைகள் தங்கள் மூதாதையருடன் தொடர்பு படுத்தும் பாதைகள் எனவும், தங்கள் விளை நிலத்திற்கு நீர் கொடுக்கும் பாதைகள் எனவும் நம்பப்பட்டதாம்.

     மாரியா  ரிச்சே  எனும் கணிதவியலாளர் இந்த கோடுகள் வானவியல் நாட்காட்டி என்கிறார். இந்த பட்டைகள் முக்கிய நட்ச்சத்திரங்கள் மற்றும் கோள்களின் இடத்தை குறிக்கின்றது என்கிறார்.

    எரிச் வொன் இந்த பாதைகளை 1968-ல் ஆராய்ந்தார். அவர் இந்த பாதைகள் புராதான வானவியலார்களால் உருவாக்கப்பட்ட ராக்கெட் ஓடுதளங்கள் எனவும் , இந்த இடத்தின் நிலைத்தன்மை பாதிப்பால் அப்படியே விட்டுவிட்டு சென்று விட்டனர் எனவும், மக்கள் அவர்களை கடவுள்கள் என நினைத்து வழிபட்டதாகவும் , அவர்கள் திரும்ப வருவார்கள் என
நம்பிக்கையுடன் இருந்ததாகவும் கூறுகிறார்.

      ஆக வேற்று கிரக வாசிகளால் உருவாக்கப்பட்டதோ இல்லை சாதாரண மனிதர்களால் உருவாக்கப்பட்டதோ, இன்றளவும் இந்த நாஸ்கா கோடுகள் அறிவியலுக்கு அப்பாற்பட்ட புதிராக விளங்குகிறது.